December 17, 2014

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை இட்லி


மூட்டு வலியை நீக்கும்

முடக்கத்தான் கீரை இட்லி

தேவையானவை: இட்லி அரிசி - 3 கப், முழு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப், வாழை இலை - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.


செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து--வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்... சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இட்லி தயார்

No comments:

Post a Comment