December 23, 2014

இங்கே சில யோசனை.

இங்கே சில யோசனை.

தமிழகத்தில் பல லட்சம் உழவர்கள் ரசாயனத்தை விட்டு வெளியே வர மனம் இல்லாமல், கவ்விபிடித்துகொண்டு இருப்பதுதான் வேதனை. தயங்கி நிற்கும் அந்த விவசாயிகள் தாராளமாக இயற்கை விவசாயத்தில் கால் பதிக்கலாம். அதற்கு முன்னோட்டமாக இங்கே சில யோசனை.

வேப்பம் கொட்டையை ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊர வைத்து, மறுநாள் காலையில் மாவாட்டும் இயந்திரத்தில் தண்ணீர் விட்டு அரைத்து காடா துணியில் ஊற்றி பிழிந்து, அதனுடன் காதி சோப்பை தூளாக்கி கலந்தால், வேப்பம் கொட்டை சாறு தயார். இதை நெற்பயிருக்கு தெளித்து நல்ல பலன் கிடைத்ததால் பலரும் இதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.


நீங்கள் பயன்படுத்தும் யூரியா, எளிதில் நீரில் கரையும். ஆனால் வேப்பம் பிண்ணாக்கை பொடி செய்து யூரியாவுடன் கலந்து தண்ணீர் தெளித்து மூடி வைத்திருந்து பின்னர் பயிருக்கு இட்டால் , யூரியா உடனடியாக நீரில் கரைவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா உப்பு அதிக நாள் நிலத்தில் இருந்து, தேவையான நைட்ரஜனை பயிருக்கு வழங்குகிறது. இதனால் உரம் இடுவதில் சிக்கனமும்,நெற் பயிரில் கூடுதல் விளைச்சலும் கிடைப்பதாக பதிவு செய்யபட்டுள்ளது.


இப்போது புரிந்திருக்குமே வேம்பின் மகத்துவம். இயற்கை வழி விவசாயத்திற்கு மெல்ல தாவும் விவசாயிகள், இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.- டாக்டர். கோ. நம்மாழ்வார்.
இயற்கை வழி விவசாயத்திற்கு வேம்பின் அவசியம் போற்றப்பட வேண்டிய உதவி.

No comments:

Post a Comment