February 15, 2017

சேவல் சண்டை – பாரம்பரிய விளையாட்டுப் பற்றி ஒரு தகவல்

சேவல் சண்டை – பாரம்பரிய விளையாட்டுப் பற்றி ஒரு தகவல்

by  • March 1, 2014 • 0 Comments

cock-fight-300x200 

சேவல் சண்டையில் இருவகை உண்டு
1. வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை.
2. கத்திகால், கத்திக் கட்டு சேவல் சண்டை
இவ் இரண்டு வகைச் சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப் படுகின்றன.  இவ் இரண்டு வகை சண்டைச் சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம்.  இது  சாமானியனுக்குத் தெரியாது.  ஆனால், சேவல் சண்டைக் காரர்களுக்கு எளிதாகவே  தெரிந்துவிடும்.
குறிப்பு: தமிழ்நாட்டில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. பன்டைய காலத்தில் சேவல் சண்டை பாரம்பரிய விளையாட்டாகவே கருதப்பட்டது. ஆகவே, இப்புதியத் தலைமுறையினருக்கு சேவல் விளையாட்டு பற்றிய தகவலினை  அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வெற்றுகால் சேவல் சண்டை
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை,  பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்றுக் கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்பட்டுள்ளது.   தமிழ் சினிமாவின் “ஆடுகளம்” திரைப்படத்தில் வந்த சேவல்கள் அனைத்தும் வெப்போர் சேவல்கள் ஆகும்.

வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டு மஸ்தான உடல்வாகுடன் இருக்கும்.  சில சேவல்கள் இரும்பைப் போன்ற கழுத்துடன் இருக்கும்.  வெப்போர் சேவல்களை அசில் (asil அல்லது aseel)
என்று அழைகின்றனர் காரணம் “ அசில்” என்ற சொல் “ அசல்” என்ற சொல்லின் திரிபே ஆகும்.  அதற்குச் “ சுத்தமான” அல்லது “ கலப்படம் இல்லாத” என்று அர்த்தம். இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும்தான் சண்டை சரியாகச் செய்யும்.  வெப்போர்  சேவல்களைப் பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம்.   பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன.  இவற்றிற்குச் சண்டைப் பயிற்சியளிக்கும்போது அந்தக் குணம் மேலும் மெருகேற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்று அவற்றிற்குத் தெரியும்.  இவ்வகைச் சேவல்களுக்கு உடம்பே ஆயுதம்.  காலில் உள்ள நகங்கள் கட்டை விரலுக்கு மேல் மாட்டுக் கொம்பினை  ஒத்ததாக நகமும் வளர்கிறது.  இதனை “ முள் “ என்று கூறுகின்றனர்.  இந்த  “ முள் “
சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டுச் சேவல் சண்டை , என வெவ்வேறு இடத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டுக் காளைகளை  எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ  அதே போல, சண்டைச் சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.

பொதுவாகவே சேவல்களுக்குச் சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை  உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.அதனால் அவற்றைச் சண்டையிடச் செய்வது என்பது பயிற்சியாளர்களுக்குப் பெரிய கஷ்டம்  இல்லை. சண்டைப் பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்குக்  கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை,  பாதாம், பிஸ்தா, முந்திரி,ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
அம்பின் முனைபோன்று கூர்மையாக்கப் படுகின்றது.  சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரிச் சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.  அடி தலையில் பட்டால்  மூளை சிதறிவிடும்.  கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைந்து சேவல்கள் இறப்பது உண்டு.    வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும்.  மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.
சண்டைக்குப் பலமாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததில் இருந்தே பேணிப் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.  6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப் படும். இதை “டப்னி” என்று கூறுவர்.  இதில் நல்ல சேவல்களை மட்டும் விட்டுவிட்டு  மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர்.  இதற்குக் காரணம் அவர்கள் வேண்டாம்  என்று விட்ட சேவல்களின் அடுத்த தலைமுறையில் எதிர்பார்த்த பண்புகள் வரலாம்.  அப் பண்புகள் எதிராளியின் கைகளுக்குப் போகக்கூடாது என்று அதனைக் கொன்றுவிடுவர்.

சண்டைக்குத் தயார்படுத்தும் வகையில் சேவல்களுக்குக் கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்களை அரைத்து அதைச் சுட வைத்துப் பின்னர் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.  இது தவிர பாதாம், பிஸ்தா, பழங்கள், சாரப்பருப்பு, முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவற்றையும் சேவல்களுக்குக் கொடுக்கின்றனர்.
சேவல் சண்டைக்கு 21 நாட்கள் முன் சிறப்புத் தயார் நடக்கும்.  அப்போது மிகவும் சத்தான உணவுகளுடன் நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்றவை பயிற்சியளிக்கப் படும்.  பின்பு சண்டைக்குக் களம் இறக்கப்படுகின்றது.போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட சேவல்கள் உயரம் முதலில் பார்க்கப்படுகின்றன.  உயரத்திற்கு ஏற்ப சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன.

ஒரு வெப்போர் சேவல் சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் சண்டை போட வேண்டி இருக்கும். 15 நிமிடங்கள் போர் செய்தபிறகு 15 நிமிடங்களுக்கு இடைவேளை இருக்கும். இவற்றைத் ‘தண்ணிக்கு எடுப்பது’ என்று கூறுகின்றனர்.  அப்போது காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலிஒத்தடம் கொடுக்கப்படுகின்றது.  பின்னர் க்ளுகோஸ் போன்றவைத் தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் புதுத்தெம்புடன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றது.சண்டை நேரம்  15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்) + 15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்)+ 15 நிமிடம் (சண்டை) 15 நிமிடம் (தண்ணீர்)+ 15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்) = மொத்தம் 1.45 மணி (முழு சண்டை நேரம்) நேரம் ஒரு சண்டை  நடைபெறுகின்றது.நல்ல தரமான சேவல் வகைகள் எதிர்ச் சேவலை 3 நிமிடங்களில் கூடக் கொல்லமுடியும்.  இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுப் பரிசு வழங்கப்படும்.  இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் விலை போகும்.  வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.வெற்றி பெற்ற சேவல்களுக்குத் தங்க நாணயம், பணம், கேடையம், மெடல் போன்றவை பரிசாக  வழங்கப்படும்.  ஆடுகளம் படத்திற்குப் பிறகு இவ்வகைச் சேவல்களுக்கு மவுசு கூடிவிட்டது. இவ்வகைச் சேவல்களில் பலவகைகள் உண்டு.  அவை பொதுவாக ரேஜா (குள்ளமான சேவல்கள்) கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும் அவைகள் அவற்றின் சிறகின் வளங்களைப் பொறுத்தே அழைக்கப்படுகின்றன

ஜாவா==>பச்சை வெள்ளை வண்ணம் மற்றும் கருப்பு வால்
யாகுத்==> சிவப்பு
பீலா ==> மஞ்சள்
தும்மர் ==> சாம்பல்
சபீ==>வண்ணப் புள்ளிகள்
நூரி==> வெள்ளை
கதிர்/காதர்==>கருப்பு .

இவை மட்டுமின்றி “பேட்டை மாதிரி (பேட்டை போன்று காட்சியளிக்கும்)” “ கல்வா (தாடியுடன் இருக்கும்)”  ஆகிய வகைகளும் உள்ளன. வெப்போர் சேவல்களுடன் கத்திக்கால் சேவல்களைச் சண்டைக்கு விட முடியாது காரணம் கத்திக்கால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராகச் சண்டை போட முடியாது.  சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும்.

கத்திச் சேவல் சண்டை
சேவலின் வலதுகாலில் இதற்காகச் சிறு கத்தி கட்டப்படுகிறது.  பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துககொண்டு இரு  சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர்.  இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோமாக மோதுகின்றன.  மோதலில் காயமடையும் சேவல்களுக்குக் குடிப்பதற்குத்  தண்ணீர் அளித்து, தண்ணீரை வைத்து சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போல தண்ணீரை ஊற்றியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர்.   போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன.   தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு.  கத்தி கட்டிற்குப் பயன்படும் சேவல்கள் கட்டுச்  சேவல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கத்திச் சேவல்களுக்கு வால் நீளமாக இருக்கும். இவற்றுள் பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த  வகைகளாகக் கருதப்படுகின்றன.  நிறத்தைப் பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை… கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக்கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு, சித்திரப்புள்ளி நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும்.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன.   கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன.  கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக்  கொண்டவை காகச் சேவல்கள்.  கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள்.  கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை  பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன.  பழுப்பு நிறத்தை உடையவை பொன்நிறம் என்பனவாகும்.  சாம்பல் நிறத்தைப்  பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல்,  கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரமாக அழைக்கப்படுகின்றன.  அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல  வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர்.  வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால்,  காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடப்படுகிறது.போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக்  கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர்.  இதற்கு’ நடவு போடுதல்’ என்று பெயர்.  நடவு போடுதல் செய்த பின்பு  எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதேநெறி, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவல்களுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டிவிடுவர்.சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் அவற்றை நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையயான்று பார்க்கும் படி இருக்கும்.  இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர்.  அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கம்.

இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையயான்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன்  உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்தும்.  அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர்  தத்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர். அதற்குத் தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர்.  ஈரத்துணியால்  காயங்களைத் துடைத்து மருந்திடுவர்.  மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்து களத்தில் விடுவர்.

கத்திக்கால் சேவல்கள் பெரும்பாலும் எதிர் சேவலின் நெஞ்சுப் பகுதியைத் தாக்கும்.  சில நேரங்களில் எதிர் சேவலின் குடல்  சரிந்து இறக்கும் அளவிற்கு தாக்குதல் இருக்கும்.  முதலில் வேகமாக நொடிப் பொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிக்கின்றது.
போரிட்டுகொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல் முடிவே இவ் விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவுசெய்கிறது.   இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்து விட்டாலோ, களத்தைவிட்டு ஓடி விட்டலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றி அடைந்ததாகிறது.  தோற்ற சேவல் உயிருடனோ இறந்த நிலையிலோ வெற்றி அடைந்த சேவலின் உரிமையாளருக்குக் கிடைக்கிறது.  இதற்கு “ கோச்சை “ என்று பெயர். சேவல் சண்டைப் போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி குத்தி பலியாவதுண்டு.  ஆதலால் மிகவும் பாதுகாப்புடன் சண்டைக்கு விடுவது அவசியம்.பல அறிய இனச் சேவல்கள் இந்த சேவல் போராளிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.  இச் சேவல்களை வளர்ப்பதே பெரிய கெளரவமாகக் கருதப்படுகின்றது.  இன்று உலக மக்களுக்குப் புரதப் பற்றாகுறையினைச் சரிசெய்யும் “ ப்ரைலெர் கோழிகள்” இந்த  சண்டைக் கோழி இனத்தையும், பிற கோழி இனத்தையும் கலவை செய்ததால் கிடைத்தனவாகும்.  உலகமே இச் சேவல்களை ஒரு  அரிய பொக்கிமாகப் பார்கின்றனர்.  இதன் மூலமாகப் பல பயனுள்ள கோழி வகைகள் ( ரோட் ஐலண்ட, கார்னிஷ், ப்ரைலெர்(etc) ஆராய்ச்சி மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.

சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தீன், அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள்  தொழிலாக வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கின்றன.   கிராமங்களில் பொழுது போக்காக இருக்கிறசேவல் சண்டை நகரங்களில் சூதாக மாறி விடுகிறது.திருச்சிராப்பள்ளிக்கு முன்பு உறையூர் என்ற ஒரு ஊர் உண்டு.  கரிகாற் சோழன் யானை மீது பவனி வரும்போது ஒரு கோழி  யானையிடமிருந்து தன் குஞ்சுகளை காக்க யானையுடன்  போர் செய்து துறத்தியுள்ளது.  அது கண்ட சோழன் அங்கு கோட்டை கட்டி ‘வீரம் உறையும் ஊர்’ என உறையூர் எனப் பேரிட்டு தலைநகரும் ஆக்கினான். அதற்குக் ‘கோழி ‘யூர் என்ற பெயரும் உண்டு 108 திவ்விய தலங்களில் இதுவும் ஒன்றே.கோழி‘ பொதுச் சொல், பெட்டைக் கோழி, சேவற் கோழி என்று தான் அழைக்க வேண்டும்.  கோழி கூவியது (ஆண்) கோழி  முட்டை இட்டது (பெண்) இது இலக்கண விஷயம்.

No comments:

Post a Comment